செவ்வாய், 12 நவம்பர், 2013

சுவையொழுகுவதென்ன தமிழிலே...

நான் கவிதை சொல்லும் வாலிபன்
உன் கனவில் தோன்றும் காதலன்
புதுமை செய்யப் பிறந்தவன்
பூவில் தேனைப் போன்றவன்

காற்றில் ஆடும் மூங்கிலில் புது
கானம் பாடும் பாவலன்
தோப்பில் ஆடும் பழங்களில்
சுவைப் பாலும் தேனும் போன்றவன்

தவழும் அலைகள் கடலிலே
உன் தாவணி சரியுது இடையிலே
பின்னிய கூந்தல் ஜடையிலே
மனம் சிக்கியதென்ன நடுவிலே

மெல்லிய பனித்துளி இதழிலே
பொன் மேனி சிலிர்க்குது குளிரிலே
பள்ளியின் நாட்களை எண்ணியே
பருவம் நாணுது கூணியே

வில்லிடை அம்பினைப் போலவே
விழிகள் விறைத்து நிற்குது எதிரிலே
சொல்லிட வார்த்தைகள் இல்லையே
சுவையொழுகுவதென்ன தமிழிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக