ஞாயிறு, 10 நவம்பர், 2013

கண்ணம் என்ன போர்முனையா - உன்
கண்களிரண்டும் அனுஉலையா
இமைகள் என்ன வான்படையா - என்
இளமையின் தீவிரம் புரியல்லயா

அடிக்கடி நெளியிர திமிரிலே - என்
அரும்பிய மீசை எதிரிலே
வளையிர சுழியிர வழியிலே - இந்த
வயசிக்கு ஒன்னும் புரியல்ல

பனியிலே மழையிலே நனைகிறேன் - உன்
பார்வையில்தானடி காய்கிறேன்
இரவிலும் பகலிலும் வாடினேன் - இரு
இமைகளுள் வைத்துன்னை மூடினேன்

வளர்கிற தேய்கிற வெண்மதி - கவி
வரிகளில் வருகிற தாய்மொழி
உறவினில் உணர்வினில் கலந்திடு - என்
உயிரினில் உயர்வினில் மலர்ந்திடு

-கிராமத்தான் கலிபா-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக