வெள்ளி, 3 அக்டோபர், 2014

மிஹிந்தலையின் பதிவாய்...
காப்பியக்கோவுடன் சிரேஷ்ட அறிவிப்பாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் - நாச்சியாதீவு பர்வீன் - கிண்ணியா நஸ்புள்ளாவுடன்
மிஹிந்தலையின் பதிவாய்...
காப்பியக்கோவுடன் சிரேஷ்ட  அறிவிப்பாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் - நாச்சியாதீவு பர்வீன் - கிண்ணியா நஸ்புள்ளாவுடன்
மிஹிந்தலை ஏ பாரிஸ் அவர்களின் நூல் வெளியீட்டின்பின் உறவுகளுடன் ஓர்பதிவு...
இடமிருந்து வலமாக..
காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் - கவி அஷ்ரப் சிஹாப்தீன் - கவி யோ.புரட்சி - கவி கிண்ணியா அமிர் அலி - கவி செந்தூரன் - கவி பெரோஸ்கான் - கவி கிண்ணியா சபருள்ளாஹ் - கவி கிண்ணியா ஏ நஸ்புள்ளாஹ் - அடியேன் மகளுடன் -ஆசான் சமரபாகு உதயகுமார்.
வலம் வருதல் வேண்டுதலா ?
------------------------------------------------------
தென்னங் கீற்றிடையால்
தெரிகின்ற வெண்ணிலவே
தனியாத தாகமதை - கண்ணில்
தந்துவிட்டுச் செல்வதெங்கே...

சித்திரத்துப் பொன் மேனி
பார் சுற்றுகின்ற வெண்ணிலவே
தேடித்தேடி யாரைத்தான் - உடல்
தேய்வதென்ன வெண்ணிலவே...
வயிற்றுச் சுமையுடனே
வலம் வருதல் வேண்டுதலா ?
நிறை மாதக் கற்பினியாய் - நீ
நில்லாமல் செல்வதெங்கே...
பனி இரவின் தனிமையிலே
பாலொளியின் அழகினிலே
கவி வரிகள் நானெழுதி - உளம்
களிப்படைந்தேன் வெண்ணிலவே...
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.
”நழுவி” நூல் வெளியீட்டில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் கௌ-எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களுக்கும் ஐ.ரீ. என். பணிப்பாளர் புரவலர் ஹாஸீம் உமர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2014-09-20ம் திகதி பி.ப. 4:00 மணிக்கு பொத்துவில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட எமது சிறுவர்பூங்கா திறப்புவிழாவும் பி.ப. 4:30க்கு சிறுவர் பூங்காவில் எனது கவிதை நூல் அறிமுகவிழாவும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவிருக்கிறது.
நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைத்து உள்ளங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
-நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவுடன்
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில் ஹிதாயாபுரத்தில் அமைக்கப்பட்ட "தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்கா" திறப்பு நிகழ்வுக்கு(2014/09/20) அதிதிகளை அழைத்துச்செல்லும்போது
ஓநாயும் அபாபீல்களும்
----------------------------------------
மூத்திர நெடியோடு இறுக்கிப் போர்த்தி
வந்திருந்த வழுக்கை ஓநாய்
கடைவாய் பற்களுக்குள் சிக்கிய
மாமிசத் துண்டிழைகளை
வழி நெடுகிலும் அசைபோட்டு
புனிதத்தின் பெயரால் பிரசங்கிக்கிறது...

நர வேட்டையாடி ஓயாத பசியில்
அந்னிய காடடொன்றிற்குள் அரசமரியாதை
துவக்குகளேந்தி அழைத்துவரப்பட்டிருக்கு
பிணக் குவியல்களின் மீது
வெறிபிடித்தலைந்த இரத்தக்கறையோடு
ஓநாய் வந்த தடமெங்கும் பிணவாடை
ஹலாலுணவில் பாய்ந்து குதறி
மாடுகட்டியோய்ந்த புலால்தின்னிகள்
பன்றியிறைச்சியை புசித்துக்கிடந்ததுகள்
சருகு புலி கொடுப்புலிகள்
ஓநாயின் வரவால்
வாலைச் சுருட்டிக்கொண்டு வரிசையாகின
தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் சிறுபான்மையின்
கொதித்துக் கொண்டிருக்கும் மனதின் பிரார்த்தனையில்
”அபாபீல்”களுக்கான கற்களை
சூடாக்கிக் கொண்டிருக்கிறது
மழயைில்லாத இந்தக் கோடை !
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.
சகோதரர் முஸ்டீன் எழுதிய "ஹராங்குட்டி " சிறுகதைத் தொகுதியை நண்பர்கள் பொத்துவில் புக் சொப்பிலும் பெற்றுக்கொள்ளலாம்.
எனது ” நழுவி” கவிதை நூலை கொழும்பில்”பூபாலசிங்கம் புத்தகசாலை”யிலும்(வெள்ளவத்தை) - தெமடகொட”இஸ்லாமிக் புக் ஹவுஸி”லும் பொத்துவிலில் ”பொத்துவில் புக் சொப்”பிலும் பெற்றுக்கொள்ளலாம்.
மாயம் நிறைந்த உலகை ஆளும்
நாயகன் நீயல்லவா
மானிட வாழ்வின் தேவைகளறிந்த
ஏகனும் நீயல்லவா...
-மாயம் நிறைந்த-
அர்ஷதன் நிழலை அடியார்க்கருளும்
அதிபதி நீயல்லவா
அதிபதி நீயல்லவா
ஆக்கிட அழித்திட குன்னென்றோதும்
குணமும் உனதல்லவா
குணமும் உனதல்லவா
அருளும் உனதல்லவா - எல்லாப்
புகழும் உனதல்லவா
-மாயம் நிறைந்த-
கருவினில் உருவை காத்திடச்செய்யும்
கருணை உனதல்லவா
கருணை உனதல்லவா
உருவினில் உயிரை புகுத்திடச்செய்யும்
உன்னதம் உனதல்லவா
உன்னதம் உனதல்லவா
ரஹ்மான் நீயல்லவா - அர்
ரஹீமும் நீயல்லவா
-மாயம் நிறைந்த-
சுழலும் உலகதை சுருட்டிடுமொருநாள்
சூட்சுமம் உனதல்லவா
சூட்சுமம் உனதல்லவா
சூனியமாக்கிடும் வாழ்க்கை நிலையின்
சூழ்ச்சியும் உனதல்லவா
சூழ்ச்சியும் உனதல்லவா
அஹதும் நீயல்லவா - அஸ்
ஸமதும் நீயல்லவா
-மாயம் நிறைந்த-