வலம் வருதல் வேண்டுதலா ?
------------------------------------------------------
தென்னங் கீற்றிடையால்
தெரிகின்ற வெண்ணிலவே
தனியாத தாகமதை - கண்ணில்
தந்துவிட்டுச் செல்வதெங்கே...
------------------------------------------------------
தென்னங் கீற்றிடையால்
தெரிகின்ற வெண்ணிலவே
தனியாத தாகமதை - கண்ணில்
தந்துவிட்டுச் செல்வதெங்கே...
சித்திரத்துப் பொன் மேனி
பார் சுற்றுகின்ற வெண்ணிலவே
தேடித்தேடி யாரைத்தான் - உடல்
தேய்வதென்ன வெண்ணிலவே...
வயிற்றுச் சுமையுடனே
வலம் வருதல் வேண்டுதலா ?
நிறை மாதக் கற்பினியாய் - நீ
நில்லாமல் செல்வதெங்கே...
பனி இரவின் தனிமையிலே
பாலொளியின் அழகினிலே
கவி வரிகள் நானெழுதி - உளம்
களிப்படைந்தேன் வெண்ணிலவே...
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.
பார் சுற்றுகின்ற வெண்ணிலவே
தேடித்தேடி யாரைத்தான் - உடல்
தேய்வதென்ன வெண்ணிலவே...
வயிற்றுச் சுமையுடனே
வலம் வருதல் வேண்டுதலா ?
நிறை மாதக் கற்பினியாய் - நீ
நில்லாமல் செல்வதெங்கே...
பனி இரவின் தனிமையிலே
பாலொளியின் அழகினிலே
கவி வரிகள் நானெழுதி - உளம்
களிப்படைந்தேன் வெண்ணிலவே...
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக