வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஓநாயும் அபாபீல்களும்
----------------------------------------
மூத்திர நெடியோடு இறுக்கிப் போர்த்தி
வந்திருந்த வழுக்கை ஓநாய்
கடைவாய் பற்களுக்குள் சிக்கிய
மாமிசத் துண்டிழைகளை
வழி நெடுகிலும் அசைபோட்டு
புனிதத்தின் பெயரால் பிரசங்கிக்கிறது...

நர வேட்டையாடி ஓயாத பசியில்
அந்னிய காடடொன்றிற்குள் அரசமரியாதை
துவக்குகளேந்தி அழைத்துவரப்பட்டிருக்கு
பிணக் குவியல்களின் மீது
வெறிபிடித்தலைந்த இரத்தக்கறையோடு
ஓநாய் வந்த தடமெங்கும் பிணவாடை
ஹலாலுணவில் பாய்ந்து குதறி
மாடுகட்டியோய்ந்த புலால்தின்னிகள்
பன்றியிறைச்சியை புசித்துக்கிடந்ததுகள்
சருகு புலி கொடுப்புலிகள்
ஓநாயின் வரவால்
வாலைச் சுருட்டிக்கொண்டு வரிசையாகின
தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் சிறுபான்மையின்
கொதித்துக் கொண்டிருக்கும் மனதின் பிரார்த்தனையில்
”அபாபீல்”களுக்கான கற்களை
சூடாக்கிக் கொண்டிருக்கிறது
மழயைில்லாத இந்தக் கோடை !
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக