நாசிற் கலிபா
நான் பனைமரம் அல்ல
நீ மரங்கொத்தி....
எறும்பு கடித்த வலிதான் எனக்கு
நீ கொத்தியிழு மனதை
கசிந்து ஒழுகிய - உன்
ஞாபகங்கள் கண்ணீரானது
துடைக்க
கைக்குட்டை ஆகாதென்று
மீசையிடுக்குகளில்
வழிந்தோடியது
நான் பனைமரம் அல்ல
நீ மரம் கொத்தி ...
இறுக்கி பிடித்த மனம் தளர்த்தி
எனை அழவைக்கும் நீ
என்னுள் எங்கிருந்து
உசுப்புகிறாய்.
தும்மல் துளியாய் - அல்லது
எச்சில் துளியாய்
வா அடிக்கடி
கிளிபோல
நாவல்மரக் கொப்பிலிருந்து
பேசலாம்
முருங்கை மரத்தில்
மாம்பழக் குருவியாய்
ஏதோ சொல்லிப் பறக்கலாம்
நீ வந்து விட்;டுப்போ
நான் பனைமரம் அல்ல
நீ மரம் கொத்தி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக