வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஒரு துளி சொப்பனச் சுகம்

                                                         நாசிற் கலிபா


துகள்களாய் சிதைந்து போன
ஞாபகங்களில்
வா..
சொட்டு நேரமாவது
புல்நுனியின் மேல்
பூவிதலின் மேல்
பனித்துளியாய் ஒய்வெடுத்து
கரைந்து போவோம்
வேர் உறுஞ்ச..

கறுப்பு முகில் களி பிசைந்து
பதுமை செய்து
வானவில்லில் சாயம் கரைத்து
மை பூசி
சூரியச் சுடரில்
சொட்டுக் காயவைத்து
நிலவுக்குப் பின்னால்
ஒழித்து வைப்போம்
வா.. இருவரும்
காற்றிலே மிதந்து சென்று..

உன் வட்டமுக நெத்தியிலே
நிலாக் கிண்ணத்தில் உள்ள
சந்தனப் பொட்டுவைத்து
விடியலில் வீசும்
குளிர் காற்றால் - இதழில்
நோகாமல் முத்தமிட்டு
காற்றிலசையும் தென்னையின்
குருத்தாய் சிரித்து மகிழ்வோம்
பின்..
பூமியின் பெரிதான
மலையைப் பிளந்து - உள்ளே
தாழிட்டு பதுங்கிக் கொள்வோம்
வா..
பூவுக்கு நோகாமல்
புல்வெளிகளால் நடந்து செல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக