படம்: நீர்மடி
பாடியவர்: சரவணன்
பாடியவர்: சரவணன்
பாடல்வரிகள்: நாசிற்கலிபா
இசை: சுண்டலான்
இசை: சுண்டலான்
வலை விரிப்போமா
நண்டு மீனு சொண்டு இறால்
வேகவைப்போமா
பொத்திக் களப்பு வத்திக்கிடக்கு
மெத்த மீனு செத்துக்கிடக்கு
ஒத்தக்காலில் கொக்கு இருக்கு
கொத்தியிழுக்க நேரம் இருக்கு
வாடா நண்பா வாடா
களப்பு வத்திக்கிடக்கு வாடா
நீராடும் ஓடம் கரையில் வாடுதே
நினைக்க நெஞ்சம் தடுமாறுதே
மூலையிலே துடுப்பு தனித்துப்போனதே
மூணுவேளை அடுப்பில் நெருப்புமில்லையே
வாடா நண்பா வாடா
களப்பு வத்திக்கிடக்கு வாடா
நீர்கொண்ட கார் மேகம்
கவலை கொள்ளாதோ
நீர் இன்றி வாடும் மண்ணில்
கண்ணீர் சிந்தாதோ
வாடா நண்பா வாடா மனம்
பத்திக்கிடுது வாடா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக