வாழைப்பூ ஏன் வளைந்து
நானம் கொள்ளுதோ
வாடை வந்து காதில் ஏதும்
சொல்லிச் சென்றதோ
சீர் கொண்டு போகும் மேகம்
செல்லும் வழியிலே
சிறு துளிகள் தூவிச் செல்லும்
மண்ணின் மடியிலே
அந்திவானம் மஞ்சள் நேரம்
ஏன் சிவந்ததோ
மாலைப் பொழுது மனதை மெல்ல
மயக்கிச் சென்றதோ
கண்களினை மெல்ல மூட
கனவு ஆளுமே
கண்விழித்துப் பார்த்துவிட்டால்
கலைந்து போகுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக