வெள்ளி, 28 செப்டம்பர், 2012

எனக்கு பிடித்த பாடல்

வாழைப்பூ ஏன் வளைந்து
நானம் கொள்ளுதோ
வாடை வந்து காதில் ஏதும்
சொல்லிச் சென்றதோ

சீர் கொண்டு போகும் மேகம்
செல்லும் வழியிலே
சிறு துளிகள் தூவிச் செல்லும்
மண்ணின் மடியிலே

அந்திவானம் மஞ்சள் நேரம்
ஏன் சிவந்ததோ
மாலைப் பொழுது மனதை மெல்ல
மயக்கிச் சென்றதோ

கண்களினை மெல்ல மூட
கனவு ஆளுமே
கண்விழித்துப் பார்த்துவிட்டால்
கலைந்து போகுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக