ஏழை ஏழை என்று சொல்லி
எத்தனை நாள் வாழ்வது
தோளை நிமிர்த்தி ஏரைப்பிடித்தால்
துன்பம் உன்னை வெல்லாது
அஞ்சி அஞ்சி வாழ்வதிலே
இன்பம் என்ன நீ கூறு
கஞ்சும் கூழும் போதும் என்று
கவலையின்றி நீ வாழு
துன்பம் என்ன துன்பம் என்று
துரத்திவிட நீ சேரு
துவண்டிடாமல் சோர்விலாமல்
மன உறுதி கொண்டு நீ வாழு
காலம் காலம் என்று வீனே
காத்துக்கிடத்தல் ஆகாது
நேரம் நல்ல நேரம் என்று
நினைத்து நினைத்து நீ ஏறு
வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று
சலிப்பதனை நீ போக்கு
வாழும் போது மானமுள்ள
மனிதனாக நீ வாழு!
-கிராமத்தான் பொத்துவில்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக