எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள் இளமனதில்
நித்தமும் கொல்லும்
நினைவினில் தொங்கும் உணர்வலைகள்
கருங்கொடித்தீவின் நறுமலரே
காதலை நெஞ்சில் சுமந்தவளே
நிலவினைப் பருகி வளர்ந்தவளே
நினைவினை விதைத்து நகர்ந்ததென்ன
சிரிப்பினிலே மனம் சிதறவைத்தாய்
செவ்விதழில் சுகம் மடித்து வைத்தாய்
பார்வையிலே எனைப்படிக்க வைத்தாய்
பாதியில் ஏனோ விலக்கிவிட்டாய்
சோகங்கள் கூட சுகமானதே
சொல்லாத காதல் ரணமானதே
ஊமையின் ஆசை கனவானதே
உள்ளத்தில் ஒழித்தாய் உணராமலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக