செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

நீயென்ன அமலாபாலா
விழியென்ன யாழா வாளா
வருவாயா எந்தன் ஆளா
தருவேனே கூலா கோலா
                                                                                      -நீயென்ன-

செல்லச்சண்டை பிடிப்போம் வா
சேர்ந்து பாட்டுப்படிப்போமா
குத்துச்சண்டை குங்பூ எல்லாம்
கத்துத்தாரேன் வா..வா வா..வா....
                                                                                      -நீயென்ன-

வாலி உன்னை காணாமல்
வைரமுத்து கேளாமல்
கண்ணதாசன் கவிதை போலே
பூவும் காயும் பழமும் நீதான்....
                                                                                     -நீயென்ன-

நிலவில் சென்று ஒழிவோம் வா
நீந்தி கடலில் குளிப்போமா
விரியும் உந்தன் இதழின் இடையில்
விடியவிடிய கவிதை படிக்க...
                                                                                     -நீயென்ன-

-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக