வண்ணப்பூக்கள் பாராயோ
------------------------------ ----
வண்ண வண்ண பூக்கள் பார் - அது
வடிவாய் மலர்ந்து மணக்குது பார்
வெள்ளை நிறத்து பூக்கள் எல்லாம் - ஏனோ
இரவில் தானே மலர்கிறது
-வண்ண-
விரிந்த தாமரை குளத்தில் பார் - நாம்
விரும்பும் ரோஜா முள்ளில் பார்
நீல அல்லிப்பூவிடையே - நின்று
நீந்தும் மீன்கள் துள்ளுது பார்
-வண்ண-
உலகில் பெரிய மலரை பார் - உயி்ர்
கொல்லும் மலரும் உள்ளது பார்
அழகு மலரின் அதிசயம் பார் - அதில்
ஆபத்தும் உள்ளதை எண்ணிப்பார்
-வண்ண-
பூக்களில் எத்தனை நிறம் உண்டோ - அதில்
அத்தனை அத்தனை குணம் உண்டாம்
ஈக்களும் தேனீ பூச்சுகளும் - பூவில்
எடுக்கும் தேன் துளி அரு மருந்தாம்
-வண்ண-
-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்.
------------------------------
வண்ண வண்ண பூக்கள் பார் - அது
வடிவாய் மலர்ந்து மணக்குது பார்
வெள்ளை நிறத்து பூக்கள் எல்லாம் - ஏனோ
இரவில் தானே மலர்கிறது
-வண்ண-
விரிந்த தாமரை குளத்தில் பார் - நாம்
விரும்பும் ரோஜா முள்ளில் பார்
நீல அல்லிப்பூவிடையே - நின்று
நீந்தும் மீன்கள் துள்ளுது பார்
-வண்ண-
உலகில் பெரிய மலரை பார் - உயி்ர்
கொல்லும் மலரும் உள்ளது பார்
அழகு மலரின் அதிசயம் பார் - அதில்
ஆபத்தும் உள்ளதை எண்ணிப்பார்
-வண்ண-
பூக்களில் எத்தனை நிறம் உண்டோ - அதில்
அத்தனை அத்தனை குணம் உண்டாம்
ஈக்களும் தேனீ பூச்சுகளும் - பூவில்
எடுக்கும் தேன் துளி அரு மருந்தாம்
-வண்ண-
-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக