செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வண்ணப்பூக்கள் பாராயோ
----------------------------------
வண்ண வண்ண பூக்கள் பார் - அது
வடிவாய் மலர்ந்து மணக்குது பார்
வெள்ளை நிறத்து பூக்கள் எல்லாம் - ஏனோ
இரவில் தானே மலர்கிறது

                                                                                                            -வண்ண-

விரிந்த தாமரை குளத்தில் பார் - நாம்
விரும்பும் ரோஜா முள்ளில் பார்
நீல அல்லிப்பூவிடையே - நின்று
நீந்தும் மீன்கள் துள்ளுது பார்

                                                                                                            -வண்ண-

உலகில் பெரிய மலரை பார் - உயி்ர்
கொல்லும் மலரும் உள்ளது பார்
அழகு மலரின் அதிசயம் பார் - அதில்
ஆபத்தும் உள்ளதை எண்ணிப்பார்

                                                                                                           -வண்ண-

பூக்களில் எத்தனை நிறம் உண்டோ - அதில்
அத்தனை அத்தனை குணம் உண்டாம்
ஈக்களும் தேனீ பூச்சுகளும் - பூவில்
எடுக்கும் தேன் துளி அரு மருந்தாம்

                                                                                                          -வண்ண-
-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக