புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
----------------------------------------------------------
நிகவரட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி என்.கே.ஜுமானா ஹஸீன் இம்முறை நடைபெற்ற தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளதுடன் பண்ணவ லோலங் வெவ அஸ்- ஸிராஜ் வித்தியாலய மாணவி 160 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளார். இது இப்பாடசாலையின் ஒரு மைல்கல்லாகும்.
ஏதிர்வரும் 2015 பெப்ரவரி மாதம் வெள்ளி விழாவினைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் இப்பாடசாலையின் இருபத்தைந்து வருட வரலாற்றில் முதல்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்திபெற்றிருப்பது இப்பாடசாலைக்கும் இக்கிராமத்திற்குமான வரலாற்றுப் பதிவாகும். இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர் எம்.எல்.ஏ. ஹாஸிம் அவர்களின் வழிகாட்டலில் வகுப்பாசிரியை ஏ.எம். றிஸ்வானாஅவர்களின் இடையறாத கற்பித்தலும் இங்கு பாராட்டப்பட வேண்டியதாகும். எதிர் வரும் காலங்களில் இவ்வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமனம் பெற்றிருக்கும் யூ.எல்எம். தாஸிம் அவர்களின் வழிநடாத்தலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் கிராமத்தவர்களின் ஒத்துழைப்பும் இவ்வித்தியாலயத்தின் முன்னேற்றத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.